Monday, May 26, 2025

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதற்கான தீர்வை எட்டுவதில் உள்ள சவால்கள்

 ஆய்வுத் தலைப்பு 

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதற்கான தீர்வை எட்டுவதில் உள்ள சவால்கள் 



ஆய்வு அறிமுகம் 

பெண்களுக்கு எதிரான வன்முறையானது தேசிய அல்லது பிரதேச ரீதியானது மட்டுமல்ல. அது ஓர் உலகளாவிய பிரச்சனையாகும். பெண்களுக்கு எதிரான வன்முறையானது உலகில் எப்பாகத்திற்கும் உரித்தான ஒன்றாகும.; இது தேசிய எல்லைகளைக் கடந்தும் விரிவடைந்து செல்கின்ற ஒன்றாகும். இது பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை உலகளவில் ஓர் தீவிர பிரச்சனையாக உள்ளத்துடன் அவை அனைத்து மக்களுக்கும் உரித்தான மனித உரிமைகளின் முன்னேற்றத்திற்கும் பெண்கள் மற்றும் சிறுமியரின் மனித உரிமைகள் மற்றும் கண்ணியம் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் தடையாக உள்ளது. இலங்கையில் உள்ள ஒவ்வொரு 5 பெண்களில் ஒருவர் அவர்களது நெருங்கிய துணையால் உடல் மற்றும் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர். கொவிட் தொற்று நோயுடன் நாட்டில் ஏற்பட்ட சமூக பொருளாதார நிலைமைகள் காரணமாக இந்த பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை தீவிரப்படுத்தும் போக்கிற்கு வழிவகுக்கும் பல சம்பவங்கள் நாட்டில் உருவாக்கப்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும். . சமூகத்தினால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வெவ்வேறான பாத்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. துரதிஸ்ட்ட வசமாக ஆணாதிக்கம் வலுவாக இருக்கும் இத்தகைய சமூகங்களில் உள்ள இந்த ஏற்றத்தாழ்வுகள் பெண்களுக்கு எதிரான சித்திரவதையாகவும் வன்முறையாகவும் வளர்ச்சியடைவதை காணலாம். குடும்ப வன்முறை கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பாலின அடிப்படையிலான வன்முறை உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு மிக முக்கிய பிரச்சனையாகும் மேலும் இவ்வாறான வன்முறையானது பெண்களின் வாழ்க்கையினை சிதைத்து பாதிக்கப்பட்டவர்களின் உடல் மற்றும் மனநலனில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அவர்களின் நம்பிக்கை மற்றும் ஆரோக்கியத்தை செயலிழக்க செய்வதன் மூலம் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு ஓர் மறைமுகமான தடையினை உருவாக்குகின்றது.

சமூகத்தில் 50 வீதமானவர்கள் பெண்கள் ஆவர் அவள் தாயாகவும் மனைவியாகவும் சகோதரியாகவும் மகளாகவும் நண்பியாகவும் இருக்கின்றாள். ஆண் பெண் பால்நிலை வேறுபாடுகளால் இவ்வாறான அநீதிகளை கருத்தில் கொள்ளப்படாமல் அவை இயல்பான நிலைமையென எண்ணிக்கொண்டு செயற்படுவார் ஆண்களும் இவ்வாறான பால்நிலை வேற்றுமைகளால் தங்களிற்கும் பல நன்மைகள் உள்ளது என எண்ணிக்கொண்டு இருப்பதால் அவற்றை மாற்றியமைப்பதற்கு தயக்கம் காட்டுவார்கள். வீட்டுவன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக இவ் ஆய்வானது வன்முறையினை தோற்றுவிக்கின்ற பலவகையான காரணிகளையும் அதன் வடிவங்களையும் விபரிக்கின்றது. இதிலிருந்து வெளியே வருவதென்பது பாரிய சவாலாகவே உள்ளது. 

குடும்ப வன்முறை ஒருவரின் தனிப்பட்ட பிரச்சனை கிடையாது அது ஓர் சமுதாய பிரச்சனையாகும். தண்டணை சட்டத்தின்படி அது ஓர் குற்றமாகும் குடும்ப வன்முறைக்கு ஆளானவர் அரசாங்க மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்கள் மூலமாக உதவிகளை பெறமுடிவதோடு மட்டுமல்லாமல் அவர்களை துன்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க முடிகின்றது. ஆனாலும் பெண்கள் இது தொடர்பாக கதைப்பதற்கு முன்வருவதில்லை. உலக சுகாதார நிறுவனம் உலகெங்கிலும் உள்ள 3ல் 1 பெண்கள் தங்களின் நெருங்கிய துணையிடம் இருந்து அல்லது அவரது வாழ்நாளில் மற்றொரு நபரிடமிருந்து பௌதீக அல்லது பாலியல் வன்முறையினை அனுபவிப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் யாழ்ப்பாண தமிழரின் அடிப்படை வாழ்வு குடும்பத்தை பின்னணியாக கொண்டதாகும் இதில் ஆணும் பெண்ணும் பாரம்பரியமான சடங்கின் ஊடாகவே இல்லற வாழ்விற்கு இணைந்துகொள்வதை காணமுடியும். யாழ் தமிழர் சமுதாயத்தில் ஆண்கள் ஆதிக்கமுடையவர்களாகவும் பெண்கள் அவர்களுக்கு கடமையாற்றுபவர்களாகவும் இருந்துவந்துள்ளனர். தற்போது யாழ்ப்பாணத்து பெண்கள் பல் துறைகளில் முன்னேற்றம் அடைந்தாலும் நாளுக்கு நாள் வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்துச் செல்கின்றன. அதில் மிக முக்கிய பிரச்சனையாக குடும்ப வன்முறை காணப்படுகின்றது. அத்துடன் எமது மாவட்டம் கலாச்சாரம் சாதி வர்க்கம் அந்தஸ்த்து மதம் பிரதேசம் என பல்வேறு கட்டமைப்புக்களின் கீழ் இயங்குவதால் இவ் ஆய்வானது மிகவும் இன்றியமையாதது .


ஆய்வின் நோக்கம்

பிரதான நோக்கம் 

குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களினை சந்தித்து அவர்கள் தீர்வுகளை பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்கின்ற சவால்களை கண்டறிந்து அதற்கான பரிந்துரைகளை முன்வைப்பது 

துணை நோக்கம் 

வன்முறைகள் தொடர்பில் பெண்கள் கொண்டுள்ள மனப்பாங்குகளை கண்டுகொள்ளல் 

பால்நிலை சார் வன்முறைகள் மற்றும் அதுதொடர்பான அறிக்கையிடல் தொடர்பான விழிப்புணர்வை பெற்றிருத்தல் 

பெண்கள் உரிமைகள் சட்டங்கள் தொடர்பில் எவ்வளவு விழிப்புணர்வு உள்ளது என்பதை கண்டுகொள்ளுதல்


ஆய்வுப் பிரதேசம்

வலிகாமம் வடக்கு பிரதேசத்தினை மையப்படுத்தியதாக எனது ஆய்வு அமைந்துள்ளது


ஆய்வு முறையியல்

பண்புரீதியான ஆய்வு 

விடய ஆய்வு 

மையக்குழு கலந்துரையாடல்


இலக்கிய மீளாய்வு

பாலினம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உயிரியல் வேறுபாடுகளை அடிப்படையாக கொண்டது. இந்த இரண்டு தரப்பினருக்கும் முறைப்படி நீண்டகாலமாக சமூகத்தால் உருவாக்கப்பட்ட வெவ்வேறு குணாதிசியங்கள் நடத்தைகள் அடையாளங்கள் பாத்திரங்கள் மற்றும் தொழில்கள் கூட சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட சமூக காலாச்சார நிலையே பாலினமாகும்.

அந்தவகையில் பெண்களுக்கு ஒழுக்கம் பொறுமை சகிப்புத்தன்மை போன்ற பல்வேறு பண்புரீதியாக பெண்களை கட்டிப்போட்டு சமூக காலாச்சார கட்டுக்கோப்புக்கள் முடக்கி வைத்துள்ளன. ஆனாலும் 

உயிரியல் ரீதியாக அனைத்து ஆரோக்கிய நிலைமைகளையும் கொண்டதாகவே பெண் பிள்ளைகளினது பிறப்பு அமைகின்றது ஆனாலும் போசாக்கு வழங்கலின்போது ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால் அவர்களுடைய ஆரோக்கிய நிலைமை ஒப்பீட்டளவில் குறைவாகவுள்ளது. 5 வயதிற்கு குறைவான பிள்ளைகளின் இறப்பு வீதத்தில் அதிகமானவர்கள் பெண்பிள்ளைகளாவர். சில நாடுகளில் பெண் சிசுக்கொலைகள் கூட இடம்பெறுகின்றன. 

ஒரு குடும்பத்தில் பெண்பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகளுக்கு கல்விக்கான அதிக முதலீடுகளைசெய்கின்றனர். இரண்டாம் நிலை கல்வியின் பின்னர் உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்காவிடின் தொழில் கல்வியையும் நிபுணத்துவ பயிற்சியையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் பெண்பிள்ளைகளுக்கு குறைவாகவே காணப்படுகின்றது.

சிறுவயது திருமணத்திற்கு ஆளாகி தங்களது கல்வியை இழக்க நேரிடுவதும் அல்லது தராதரங்களை பெற்றுக்கொள்வதில் உள்ள தடைகள் அதிகமாக ஏற்படுவது பெண்பிள்ளைகளுக்கே ஆகும். பெண்பிள்ளைகள் தமது விருப்பமின்றி திருமணம் செய்துகொள்வதற்கு நிர்பந்திக்கப்படுவதால் சிறுவயதில் தாய்மையடைதல் பிள்ளைபெறுதல் பிள்ளைவளர்ப்பு இவ்வாறான பொறுப்புகளை சுமப்பதால் அவர்களது பிள்ளைப்பருவம் இழக்கப்படுவதாலும் கல்வியை இழக்கின்றனர். உயர்கல்வி வாய்ப்புக்களும் இழக்கப்படுகின்றது. தொழில் கல்வியும் நிபுணத்துவ கற்கைநெறிகளும் இழக்கப்படுகின்றது 

பெண்பிள்ளைகளுக்கு ஆண்பிள்ளைகளை விட தலைமைத்துவம் வகிப்பதற்கும் முடிவெடுப்பதற்கு அல்லது துணிச்சலாக செயற்படுவதற்கும் சந்தர்ப்பங்கள் குறைவாகவே காணப்படுகின்றது. ஏனெனில் அவ்வாறான இயல்புகள் ஆண்மை என வரையறுக்கப்படுவதால் ஆகும். அது பெண்பிள்ளையின் முழுமையான விருத்திக்கு பாதிப்பாக அமையும். உயர் தொழில் வாய்ப்புகள் கிடைத்தாலும் தலைமைத்துவம் வகிப்பதும் முடிவெடுப்பதிலும் உள்ள குறைபாடுகளினாலும் பல்வேறான வாய்ப்புக்களை இழக்க நேரிடும். 

பெண்பிள்ளைகளுக்கு தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவும் மின் உபகரணங்கள் கணனி உதிரிகள் மோட்டார் வாகன உற்பத்தி தொடர்பாக பெண்பிள்ளைகளுக்கு கிடைக்கும் அறிவுசார் விடயங்கள் குறைவாகையால்  தமது செயற்பாடுகளுக்கு ஆண்களை நாடவேண்டியுள்ளது. உதாரணமாக வீட்டில் மின்குமிழினை மாற்றுவது என்றாலும் தமது சகோதரனில் தங்கியிருக்கவேண்டிய தேவை இருக்கின்றது.

இவ்வாறு நோக்கும்போது பெண்களுடைய ஆளுமை விருத்திக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதுடன் இதனால் தனது குடும்பத்திலும் சமூகத்திலும் பூரண பங்களிப்புடன் வாழ்தலுக்கு தடைகள் ஏற்படும். முழுமையான அபிவிருத்திக்கான வாய்ப்புக்களை பெண்கள் இழக்க நேரிடும்.

பெண்கள் பற்றிய மூடநம்பிக்கைகள் 

பெண் உடல் பலவீனமானவள் 

பெண்களின் அறிவு கைப்பிடியளவு நீளமானது 

பெண் மென்மையானவள் 

பாலியல் ரீதியாக பெண் மிகவும் கவர்ச்சியானவள் 

எனவே பாதுகாக்கப்படவேண்டும் இவ்வாறு பல்வேறுபட்ட பின்னோக்கிய சிந்தனைகளை சமூகத்தினால் விதைத்து எப்போதும் பெண் என்பவள் ஆணாதிக்கத்திற்குள் கட்டுப்பட்டவளாகவே இருக்கின்றாள். எமது கலாச்சாரத்தால் பெண்களுக்கு கொடுக்கப்படும் பொறுப்புகள் ஒரு பெண் தாயாக சகோதரியாக மனைவியாக இவ்வாறு ஒரு பிள்ளை பராமரிப்பவளாகவும் பாதுகாக்கப்படுபவளாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இது கலாச்சாரங்களின் அடிப்படையில் இன்னமும் வழமையிலுள்ளது. 

இந்த சமூக வகிபாகங்கள் பணித்துறைகளிலும் வேறுபட்டுள்ளது. அதாவது கல்வித்துறையில் பெண் ஆசிரியர்கள் மிக அதிகமாக இருக்கின்றனர் ஆனால் பெண் அதிபர்களின் எண்ணிக்கை மிக குறைவு . இவ்வாறான நிலைப்பாடே ஏனைய நிர்வாக துறைகளிலும் காணப்படுகின்றது. 

கனரக வாகனங்கள் ஓட்டுதல் பொறியியல் பாதுகாப்பு தொழில்நுட்ப வேலைகள் மற்றும் முகாமைத்துவ வேலைகள் போன்றவை ஆண்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது இதில் கணிசமான மாற்றங்களும் இருக்கின்றன.


பாலின பாத்திரங்கள் 

1.உற்பத்தி செயற்பாடுகள் 

இதன்மூலம் பெண்ணானவள் வீட்டில் மட்டும் அல்லாமல் தேசிய பொருளாதாரத்திலும் அவளது பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.

2.இனப்பெருக்க செயற்பாடுகள் 

குழந்தை பெற்றெடுப்பது அவர்களை வளர்ப்பது வீட்டை பராமரித்தல் இதனுள் அடங்கும் 

3.சமூக செயற்பாடுகள் 

சமூக கலாச்சார குடியியல் அரசியல் ஆகிய பாத்திரங்களில் பங்கேற்பு 

இவ்வாறு பெண்கள் தமது பாலின பாத்திரங்களை பொறுப்பெடுப்பதால் அவளது செயல்த்திறன் குறைவடையும் இதனால் பல்லவேறு ரீதியான உளவியல் சமூகவியல் தாக்கங்களுக்கு முகங்கொடுக்கவேண்டியுள்ளது. 

பெண்கள் சமூகத்தில் எத்தகைய நிலையில் காணப்பட்ட்னர் என்பதனை ஜெயக்குமாரின் நூலில் காட்டப்படுள்ளது அத்துடன் பாரம்பரிய தமிழ் சமுதாயம் ஆரம்பத்திலிருந்து பெண்களை எவ்வாறு வழிநடாத்துகின்றது என்பதனை தெளிவுபடுத்துகின்றது 

செல்வியின் நூலின் மூலம் வரலாற்று ரீதியாக பெண்கள் எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளனர் என்பது விளங்கப்படுத்தப்பட்டுள்ளது 

யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் எத்தகைய நிலையினை அடைந்துகொண்டார்கள் என்பதனை தங்கேஸ்வரியின் யாழ்ப்பாண சமூகம் என்ற நூலின் மூலம் அறிந்துகொள்ளலாம் அதோடு யாழ்ப்பாண சமூகத்தின் பாரம்பரிய சமூக கட்டமைப்பினையும் அந்த நூலின் மூலம் விளங்கிக்கொள்ளலாம்


குடும்ப வன்முறை 

வீட்டு வன்முறை 

ஒரு நெருக்கமான உறவில் ஒருவர் மற்றவரை தனது அதிகாரத்தை பயன்படுத்தி கட்டுப்படுத்துவதற்காக உடல் பாலியல் உளவியல் அல்லது பொருளாதார வன்முறையை மேற்கொள்வது இது ஒரு மனித உரிமை மீறல் மற்றும் பொதுச் சுகாதார பிரச்சனை என்றும் வரையறுக்கிறது இது உலக சுகாதார நிறுவனத்தினால் கூறப்படுகிறது 


வீட்டு வன்முறையின் வடிவங்கள் 

1. உடல்ரீதியானது 

உடல்ரீதியான வன்முறைகளை பெண்கள் அதிகம் அனுபவிப்பதுண்டு அந்த வகையில் குத்துதல் அடித்தல் அரைதல் தள்ளி விடுதல் பொருட்களை வீசுதல் முடிய இழுத்தல் கை கால்களை முறுக்குதல் களத்தை நெரித்தல் ஆயுதங்களை பயன்படுத்துதல் கட்டுப்படுத்தி வைத்திருத்தல் தொந்தரவு செய்தல் பெண்ணுக்கு ஆதரவளிப்பவர்களுடன் வன்முறையாக நடந்து கொள்ளுதல் மற்றும் பலமாக இழுத்தல் உதைதல் இவை துன்புறுத்தப்படுபவருக்கு உடல் ரீதியாக உணரக்கூடிய வலியை கொடுப்பதன் ஊடாக வழங்கும் வன்முறையின் வடிவமாகும் 

2. பாலியல் ரீதியானது 

கட்டாயப்படுத்தி பாலியல் செயல்பாடு மற்றும் தாம்பத்திய வன்புணர்வு போன்றன மற்றும் ஒரு வீட்டு வன்முறையின் வடிவத்துடன் தொடர்புபடுகின்றது 

3. உளவியல் ரீதியானது 

உளவியல் ரீதியான வடிவமானது பாதிக்கப்படுபவரை உளவியல் ரீதியான வலியை உணரச் செய்வதோடு, அதனால் மன மன வடுவையும் ஏற்படுத்தும் இவற்றை பிறருக்கு வெளிப்படையாக பார்க்க முடியாது இவ்வுளவியல் ரீதியான வன்முறை துணைவரின் அடிப்படைத் தேவைகளை இல்லாமல் செய்தல் வீட்டை விட்டு வெளியே செல்லும் உரிமையினை மறுத்தல் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவரை கைவிடுதல் போன்றவற்றையும் உள்ளடக்கும் 


4. மனவெழுச்சி ரீதியானது 

இது பாதிக்கப்படுபவரை மதிப்பிழக்க செய்தல் கோபமூட்டுதல் மக்கள் மத்தியில் வைத்து பயனற்றவர் என உணர செய்தல் இவ் வன்முறை வடிவமானது பாதிப்புக்கு உள்ளானவரை மனவெழுச்சி ரீதியாக பாதிக்கும் 

5. உணர்ச்சி ரீதியானது 

அவதூறான வார்த்தை பிரயோகம் மனைவியினை குடும்ப அங்கத்தவர்கள் அயலவர்கள் முன்னாடி அவமரியாதை படுத்துதல் குடும்பத்தில் நடக்கும் எல்லா தவறுகளுக்கும் மனைவியை குற்றம் சாட்டுதல் மனைவி தவறு செய்யாவிட்டாலும் அவளை குற்றவாளியாக உணர வைத்தல் விவாகரத்துக் கொடுப்பதாக பயமுறுத்துதல் வேலைக்காரி போல நடத்துதல் குடும்ப விடயத்தில் மனைவியின் அபிப்பிராயத்தை கேட்காமல் விடுதல் உறவினர்களை பார்க்க விடாது தடுத்தல் மனைவியின் குடும்பப் பின்னணியினை சுட்டிக்காட்டுதல் கொலை செய்வதாக அச்சுறுத்துதல் முதலானவை உணர்ச்சி ரீதியான துஸ்பிரியோகமாகும்

6. பொருளாதார ரீதியானது 

மனைவியை வேலைக்கு அனுப்பாமல் தடுத்தல் மனைவியின் பெற்றோர் வீட்டிலிருந்து பணத்தினை கொண்டு வரும்படி கட்டாயப்படுத்துதல் முதலானவை இவற்றுள் அடங்கும் 

7. வாய்மொழி ரீதியானது 

பாதிக்கப்படுபவருக்கு ஏதாவது வசனம் உணர்வு ரீதியான பாதிப்பை விளைவிக்குமாயின் அது சொல் சார்ந்த துஷ்பிரயோகம் என சுட்டிக்காட்டினர் இவ்வகையான பாதிப்பு வாழ்க்கை காலத்தில் மகிழ்ச்சியையும் படைப்பாற்றலையும் கட்டுப்படுத்தி விடும் சொல் சார்ந்த மற்றும் உடல் சார்ந்த தாக்குதலை பொறுத்துக் கொண்டிருக்கின்ற பல மனைவிமாரை கடுமையான சொற்கள் கையால் அடிப்பதை விட அதிகமாக காயப்படுத்துகின்றன இத்தஸ்பிரியோகமும் உணர்வு சார்ந்த மனவடுவை உருவாக்குகின்றது இது ஒரு நபரை நிரந்தரமாக உருக்குலையவும் வைக்கும் 

இவ்வாறு குடும்ப வன்முறையான எமது பெண்களுக்கு இடம்பெறுகின்றது இது ஒரு வன்முறை சுழற்சி இதனால் பல்வேறு சவால்களை பெண்களும் சிறுவர்களும் அனுபவிக்கின்றனர் ஒரு குடும்பத்தில் பெண் பாதிக்கப்படுபவர் ஆயின் குடும்பம் சமூகம் நாடு பொருளாதாரம என பலதரப்பட்ட விடயங்களிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்


வீட்டு வன்முறையின் முக்கியமான கோட்பாடுகள் 

வீட்டு வன்முறையினை புரிந்து கொள்வதற்காக பல்வேறு சமூக அறிவியல் கோட்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன இவை வன்முறையின் காரணங்கள் வடிவங்கள் தாக்கங்கள் மற்றும் தீர்வுகளை விளக்க உதவுகின்றன 

1. அதிகாரம் மற்றும் கட்டுப்பாடு கோட்பாடு 

இந்தக் கோட்பாட்டின்படி ஒருவரது மேலாதிக்கத்தையும் கட்டுப்பாட்டையும் நிறுவுவதற்கான ஒரு சாதனமாக இருக்கின்றது பெரும்பாலும் இது கணவன் மனைவிக்கு எதிராக தன்னைத்தானே வலிமை வாய்ந்தவனாக காட்ட முயற்சிப்பதை குறிக்கின்றது 

2. பெண்ணிய கோட்பாடு

இக்கோட்பாடானது வீட்டு வன்முறையினை பாலின அநீதி மற்றும் சமூக ஒடுக்கு முறையின் விளைவாக காண்கிறது பெண்கள் பாரம்பரியமாக ஆண்களால் கட்டுப்படுத்தப்படுவதால் இவர்கள் மீது வன்முறை மேற்கொள்ளப்படுகின்றது என்று விவாதிக்கிறது இது பாலின சமத்துவம் மற்றும் சமூக மாற்றம் தேவை என்று வலியுறுத்துகின்றது

3. உளவியல் கோட்பாடு 

இக் கோட்பாடு வன்முறை செய்யும் நபரின் உளவியல் நிலை மன அழுத்தம் கோவ கட்டுப்பாட்டின்மை குழந்தை பருவ அனுபவங்கள் ஆகியவற்றை காரணங்களாக கூறுகின்றது சில சமயம் பீதியோ மனநோயோ காரணமாக கூட வன்முறை நடக்கலாம்

4. சமூக கற்றல் கோட்பாடு 

இக்கோட்பாட்டின்படி தன்னுடைய குழந்தை பருவத்தில் பார்த்த அனுபவித்த வன்முறையை கற்றுக்கொண்டு அதையே பின்பற்ற வாய்ப்பு உள்ளது 

5. சூழல் காரண கோட்பாடு 

வீட்டு வன்முறை என்பது தனி நபர் உறவுகள் சமூக அமைப்பு மற்றும் கலாச்சார சூழ்நிலைகள் ஆகியவற்றின் செயற்கை விளைவாக உருவாகும் 

மேற்கு கூறப்பட்ட வகையில் வீட்டு வன்முறையின் வடிவங்கள் கோட்பாடுகள் அமையப்பெற்றுள்ளன 


எனவே எனது ஆய்வானது வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் தீர்வு எட்டுவதில் உள்ள சவால்கள் எனும் தலைப்பின் கீழ் அமைகின்றது அதன் அடிப்படையில் நோக்கும் போது இவ் வீட்டு வன்முறையின் கீழ் அனைத்து பெண்களும் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது படித்த பெண்கள் படிக்காத பெண்கள் வேலை செய்வோர் வயது சாதி வர்க்கம் மொழி மத வேறுபாடுகள் இன்றி எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை என்னால் உணர முடிந்தது ஆனாலும் இதற்கான தீர்வை எட்டுவதற்கு இன்னமும் முன்வரவில்லை காரணம் அவர்கள் கொண்டுள்ள மனப்பாங்குகள்

1. குடும்பத்தை விட்டு பிரிய விருப்பமின்மை 

2. குழந்தைகளை பிரிய விருப்பமின்மை 

3. வெட்கம் அவமான உணர்வு 

4. சமூகத்துக்கான பயம் 

5. கணவரின் நேசம் 

6. பொருளாதாரத்தில் தங்கி வாழுதல் 

7. கணவரது வன்முறையினை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு அது சாதாரணமானது என நம்புதல் 

8. குடும்பத்தை விட்டு வெளியே போனால் இன்னமும் வன்முறை கூடும் என்று அச்சம் 

9. தாங்களும் மனிதர்கள் எமக்கும் வாழ்வதற்கான உரிமை இருக்கு என்ற அறிவின்மை 

10. பிள்ளைகள் வளர திருந்துவார்கள் என்ற நம்பிக்கையில் பொறுத்து போதல் 

11. அவர்களுக்கு முன் மரியாதையானவர்களைப் போல நடத்துதல் (உ-ம்) எனது அப்பாவும் வன்முறையாளன் ஆனால் எனது அம்மா உங்களுக்காக அதனை தாங்கி வாழ்ந்தவர் என்ற மனநிலை 

12. கணவனைப் பிரிந்து வாழ்வதனால் தனக்கு சமூக அந்தஸ்து கிடைக்காது என்னை சமூகம் புறக்கணிக்கும் என்ற எண்ணம் 

13. நான் படித்த நான் எனக்கு இப்படி பிரச்சனைகள் இருப்பதை வெளியே கூறினால் எனது பணியிடத்தில் அவமானம் மதிக்க மாட்டினம் என்ற எண்ணம் 

14. தனக்கு உதவக்கூடிய மனிதர்கள் அமைப்புக்கள் பற்றி தெரிந்திராமை

15. தொடர்ச்சி வன்முறைக்குள் இருப்பதால் மனச்சோர்வான மனநிலை இருப்பதால் அவர்களது வாழ்வதற்கான ஊக்கம் குறைந்து போதல் 

16. சேவை வழங்குனர் மீது நம்பிக்கையற்ற தன்மை


17. பெண்கள் எங்களது பிரச்சனைகளை எப்படி ஆண் உத்தியோகத்தர்களுக்கு சொல்லுவது என்ற மனப்பாங்கு.

18. சில பெண்கள் பைபிள் பற்றி கூறுகிறார்கள். கடமை அன்பு நம்பிக்கை மரியாதையுடன் இருக்க வேண்டும்இ கணவருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்ற மனப்பாங்கு.

19. தான் வீட்டை விட்டு வெளியே சென்றால் ஏனைய சகோதரர்களுக்கும் மரியாதை இல்லை என பல்வேறுபட்ட கருத்துக்களை பெறக் கூடியதாக இருந்தது 

20. அதேவேளை தங்களுக்குரிய சட்டங்கள் உரிமைகள் தொடர்பில் போதியளவு அறிவோ விளக்கமோ இல்லை. இதனையும் உணர முடிந்தது. ( இவை தொடர்பாக பின்வரும் விடயங்கள் ஆராயப்பட்டது)

எனக்கு இல்லை என்று கூறுவதற்கு உரிமை உண்டு.

எனக்கு து~;பிரயோகத்திற்கு உட்படாமல் இருப்பதற்கு உரிமை உண்டு.

எனக்கு கோபத்தை வெளியிடுவதற்கான உரிமை உண்டு. 

எனது வாழ்வினை மாற்றுவதற்கான உரிமை உண்டு. 

சேவை வழங்கினரிடம் சேவையினை பெறுவதற்கான உரிமை உண்டு.

வளர்ந்தவராகவும் மரியாதையுடனும் நடாத்தப்படுவதற்கு உரிமை உண்டு.

வன்முறை சூழலினை விட்டு விலகுவதற்கு உரிமை உண்டு. 

பாதுகாப்பாக இருப்பதற்கு உரிமை உண்டு. 

தனித்துவமாக இருப்பதற்கு உரிமை உண்டு.

எனது தனிப்பட்ட திறமைகளையும் இயலுமைகளையும் விருத்தி செய்து கொள்வதற்கான உரிமை உள்ளது. 

சட்டத்தின் ஊடாக என்னை வன்முறைக்குட்படுத்தும் துணையிடமிருந்து பாதுகாப்பினை பெற சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான உரிமை  உண்டு.

பணம் சம்பாதிப்பதற்கும் எனது சுயநிதி தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் எனக்கு உரிமை உள்ளது 

எனது மனதை மாற்றிக் கொள்வதற்கு உரிமை உள்ளது 

நான் நானாக இருப்பதற்கு உரிமை உள்ளது.

எனக்கு கல்வி கற்பதற்கானஇ சமத்துவமாக வாழ்வதற்கானஇ சம வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கானஇ பங்குபற்றுவதற்கானஇ வாய்ப்புக்கள் உண்டு.

எனவே வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தமது தீர்வினை பெற்று கொள்வதற்கு உண்மையில் எமது தமிழ் சமூக மரபுகள்இ கலாச்சாரப் பண்பாட்டு பின்னணிகள் மிக முக்கிய பங்களிப்பினை செய்கின்றன. அவைகளில் இன்னமும் முன்னேற்றமடைய வேண்டிய தேவை உள்ளது. அந்த வகையில் பின்வரும் சவால்கள் காணக்கூடியதாக உள்ளது.


சமூக சவால்கள்

கணவனையோ அல்லது துன்புறுத்துபவரையோ எதிர்த்து தன்னை பாதுகாக்க பயமான மனநிலை.

குடும்ப அங்கத்தவர்களால் தீர்வை நோக்கி நகர்வதற்கு குடும்பத்தினால் அல்லது சமூகத்தினால் இடமளிக்கப்படுவதில்லை.  

இழிவுபடுத்தப்படுவோம் அல்லது ஒதுக்கப்படுவோம் என்ற பயம்.


உளவியல் சவால்கள் 

பெண்கள் தொடர்ச்சியாக வன்முறைக்குள் வாழ்வதால் மனதளவில் ஏற்படும் மனச்சோர்வுஇ மனவடு போன்ற காயங்கள்.

பெண்கள் தங்களைக்குறித்த தாழ்வு மனப்பாங்கு. 

பெண்கள் முடிவு எடுப்பதில் உறுதியின்மை. தான் தீர்வினை நோக்கி வெளியே வந்தால் என்ன செய்வேன் என்று தன்னை தானே கேள்விக்கு உட்படுத்துதல்.

குற்ற உணர்வு 

பெண்கள் தன்னில் ஏதோ பிழை அதனால் தான் சண்டை வருகின்றது என்று தன்னில் பழி போடும் மனப்பாங்கு.

பொருளாதார சவால்கள் அல்லது வாழ்வாதார சவால்கள். : எமது பண்பாட்டில் ஆணிடம் தான் பொருளாதார பலத்தினை சமூகம் வழங்கி உள்ளது. அதனால் பெண்கள்  சார்ந்து வாழ வேண்டிய நிலைமை. அதனைத் தாண்டி வெளியே வந்தால் தொழிலிடங்களில் இடம்பெறும் பாலியல் வன்முறைகள்இ சுரண்டல் போன்றவற்றினாலும் பெரும் சவாலடகளை எதிர் கொள்கின்றனர். அத்துடன் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதிலும் பாரிய சவால்களை எதிர் கொள்கின்றனர். 

பெண்களிடமே பிள்ளை வளர்க்கும் பொறுப்பு முதியோரைப் பராமரித்தல் வீட்டைப் பராமரித்தல் போன்ற பொறுப்புக்களினால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைமை. 

குடும்ப ஆதரவு இன்மை : குடும்பத்தில் உள்ளோர் வன்முறைக்குட்படும் பெண்களுக்கு ஆதரவு வழங்காமை. பெண்கள் தீர்வினை நோக்கி வெளியே வருவதால் குடும்ப கௌரவம் மற்றும்  தங்களுக்கு பாரமாக இருப்பார்கள் போன்ற மனநிலைகளால் பெண்களுக்கு குடும்பத்தில் உள்ளோரது ஆதரவு குறைவாகவே காணப்படுகிறது. 

கலாசார மரபுகள் பண்பாட்டு காரணிகள் : சமூகத்தில் பாரம்பரிய கோட்பாடுகள் பாலின நெறிமுறைகள் இவற்றின் எண்ணங்கள் மிக ஆழமானதாக இருப்பதால் பாரிய சவாலாக காணப்படுகின்றது 

பாலின சமத்துவமின்மை இது பெரிய பகுதியானாலும் பெண் பிள்ளைகளை சிறுவயதில் இருந்து கல்வி கற்பதற்கும் அனைத்து துறைகளிலும் பங்களிப்பு செய்வதற்கும் வளர்க்கப்பட்டிருந்தால் பெண்கள் தமக்கான உரிமைகள் சட்டங்கள் பற்றி அறிவு தெளிவு இருந்திருக்கும் அங்கே பாரம்பரிய போக்கில் பெண்கள் கற்பதற்கான உரிமை மறுக்கப்படும் போது அல்லது தடுக்கும் போது இவ்வாறான சிக்கலை எதிர்கொள்வது கடினமானது

சொத்துக்களை கையாளுதல் அதன் சட்ட ரீதியான நடைமுறைகள் தொடர்பில் போதிய அளவு விளக்கம் இல்லை அதில் உள்ள இடைவெளிகளால் பெண்கள் துன்பப்படுகின்றன உதாரணம் சீதனம் முதுசம்


எமது மாவட்டத்தில் உள்ள சேவை வழங்கினார்கள் தொடர்பில் எனது பார்வை 

பாலின அடிப்படையிலான வன்முறையான வீட்டு வன்முறையினை அனுபவிக்கும் எந்த ஒரு பெண்ணும் அவளது உரிமைகள் பாதுகாப்பு நல்வாழ்வினை இந்த சேவை வழங்குனர்கள் செய்ய வேண்டியுள்ளது. அந்த வகையில் சுகாதாரத் துறையினர் சமூக சேவைகள் துறையினர் நீதித்துறையினர் மற்றும் காவல்துறையினர் போன்றோர் இவற்றுக்கான சேவையினை வழங்குவதற்காக கட்டமைக்கப்பட்டுள்ளனர் இவ்வாறு அரசகட்டமைப்புக்குள் சேவை வழங்கும் பிரிவுகள் அமையப்பெற்றுள்ளன. வைத்தியத்துறை மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்கள் நீதிமன்றங்கள் போலீஸ் நிலையங்களில் இதற்கான அதிகாரிகள் இருக்கின்றனர். அத்துடன் ஹெட்லைன்ஸ் சேவைகள் 119,1938,107,109 இவற்றின் ஊடாகவும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு அரச ஒரு முறைகளை கையாண்டுள்ளது இவற்றின் ஊடாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கும் பதிலளிப்பதற்கும் சட்டங்கள் கொள்கைகள் நெறிமுறைகள் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு இல்லங்கள் குடும்பப் பிணக்குகளை தீர்ப்பதற்கு மத்தியஸ்தர் சபை இவற்றுக்குடாகவும் வன்முறையினை அனுபவிப்பவர்கள் தீர்வினை நாடலாம.; அதேவேளை இலவசமான சட்ட சேவை பெறுவதற்கு ஒவ்வொரு நீதிமன்றங்களிலும் உள்ளே இலவச சட்ட ஆணையத்திடமிருந்து உதவிகளை பெறலாம்.

குடும்ப வன்முறை சட்டம் 

2005 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க குடும்ப வன்முறை செயல் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது குடும்ப வன்முறைக்கு எதிராக இச்சட்டம் பயன்படுகின்றது இது குடும்ப வன்முறையின் எந்த ஒரு செயற்பாட்டினையும் தடுப்பதற்கான ஏற்பாடுகளை வழங்கும் . இச்சட்டம் பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்;துகின்றது. இச்சட்டத்தில் குடும்ப வன்முறை செயல் நிகழ்த்தப்பட்டு வருகையில் அல்லது நிகழ்த்தப்படுகையில் அல்லது நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் வேளையில் இச்சட்டத்தினை நாடலாம்.

தேசிய அளவில் பெண்கள் உரிமைகளை பாதுகாத்தல் 

1. சீடோ மா நாட்டிற்கு உள்நாட்டில் வழங்கப்பட்ட பிரதிபலிப்பு 

சீடா உடன்படிகளுக்கு இணங்க இலங்கை செயல்பட சம்மதித்ததன் மூலம் இலங்கையில் பெண்களின் மனித உரிமைகளை பாதுகாக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

1993இல் இலங்கையின் மகளிர் சாசனத்தின் வரைவு 

மகளிர் விவகாரத்துக்கென தனி அமைச்சினை அமைத்தல் 

சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளை தண்டனைக்குரிய குற்றமாக தண்டனை சட்டக் கோவையில் உள்ளடக்கப்படுதல் 

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையிலிருந்து அவர்களைப் பாதுகாக்க குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்டமை

ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் மகளிர்க்குரிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு நிறுவுதல் 


2. இலங்கை மகளிர் சாசனம் 

பெண்களுக்கு எதிரான பாகுபாடு இலங்கையில் ஒரு ஜதார்த்தம் என்பதை உணர்ந்து சீடோ சமவாயத்தில் உள்ளடக்கிய பல சர்வதேச தரங்களை உள்ளடக்கிய இலங்கை பெண்கள் சாசனத்தை அரசாங்கமே மார்ச் 3 1993இல் ஏற்றுக்கொண்டது இது ஏழு பரந்த பகுதிகளில் பின்பற்ற வேண்டிய தரநிலைகளை வகுக்குறது 

அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் 

குடும்ப அலகுகளுக்குள் உரிமைகள் 

கல்வி மற்றும் பயிற்சிக்கான உரிமைகள் 

பொருளாதார நடவடிக்கைகள் அதன் நன்மைகளுக்கான உரிமை 

ஆரோக்கியம் மற்றும் ஊட்டசத்திற்கான உரிமை 

சமூக பாகுபாட்டில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான உரிமை 

பாலின அடிப்படையில் இருந்து பாதுகாப்பதற்கான உரிமை 


வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான யாழ்ப்பாணத்தில் உள்ள பொறிமுறைகள்

சுகாதாரத் துறை சார்ந்தோர் 

மித்ரு பியசவின் பிரதிநிதிகள் (நட்பு நிலையம்) 

சட்ட வைத்திய அதிகாரி 

ஆ.ழு.ர்

P.ர்.ஆ

ஊழரளெநடடiபெ 


சமூக மற்றும் பொருளாதாரம்

பிரதேச செயலகம் 

னுளுஃயுனுளு

று.னு.னு

நு.னு.ழு

ஊழுருNளுநுடுடுஐNபு ழுகுகுஐஊநுசு 

Pழு,NஊPயு,ஊசுPழு

Nபுழு

ஊடீழுளு

நுஏனுழு


நீதித்துறை 

போலீஸ் நிலைய சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவினர் 

நீதிமன்றங்கள் 


இது ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் பிரிவுக்கு உட்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன

பரிந்துரைகளும் முடிவுகளும் 

எனினும் சேவை வழங்குனர்கள் போதிய அளவு விழிப்புணர்வுடன் செயல்படுவது குறைவாகவே இருக்கின்றது எமது பிரதேசம் கலாச்சாரம் பண்பாட்டு இயல்புகளுக்குள் மிகவும் நெருங்கிய தொடர்புடன் இருப்பதாலும் இதற்கான பணியாளர்களது மனநிலை ஆளுமை பண்புகள் இதற்கு விதிவிலக்கானது அல்ல அவர்களும் ழெசஅள, ளழஉயைட ழெசஅள, பநனெநச ளவநசநழவலிந, பநனெநச பநழடழபல இவற்றுக்குடாக வளர்ந்தவர்கள் எனவே அவர்களது சிந்தனைகளும் ஆணாதிக்க சிந்தனைகளாகவும் அதனை மீறுவது தமக்கு பிரச்சனையாகும் என்ற மனப்பாங்குடன் இருப்பதால் வன்முறையால் பாதிக்கப்பட்டு வருகின்ற பெண்களுக்கு சரியான சேவையினை வழங்குவதற்கு தடையாகவே இருக்கும் இவ்வாறான மனநிலைகளில் அரச பணியாளர்கள் இருக்கும்போது சேவை பெறுவதற்கு நம்பிக்கை இல்லை பயம் மீண்டும் தங்களில் குற்ற உணர்வு வெட்கம் அவமானம் என எதிர்மறையான உணர்வுகள் வருவதால் அவர்கள் தொடர்ச்சியான தேர்தலை பெறுவதற்கு முன் வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர் அத்துடன் இடைவிலகல் அதிகம் சில அனுபவங்களை முன்வைக்கின்றேன் 

1. நாங்களும் அடி வாங்கித்தான் வாழறோம் ஆனால் அதை ழெசஅயட  தானென்று கூறுவது 

2. நீங்கள் ஒழுங்காக இருந்தால் ஏன் அவர்கள் அடிக்கிறார்கள் 

3. எனக்கு அதிகாரம் இருக்கு பிள்ளையினை பார்த்து விடுவேன் என்று பயமுறுத்துவது

4. குடிக்காத அடிக்காத ஆம்பளையா இருந்தா சொல்லுங்க பாப்போம் 


இவ்வாறு சேவை வழங்குனர்களின் மனப்பாங்குளும் இந்தப் பால்நிலை சார் மனப்பாங்குதல் மாற்றம் இல்லை அத்துடன் சேவை வழங்கும் நிலையங்களில் உள்ள வசதி குறைபாடுகளினால் மூடிய அறையின்மை துணை நாடி வருபவர்களின் ரகசியத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் இல்லை தொடர் கண்காணிப்புகள் இல்லாமை தயார் நிலை இல்லை போன்ற ஆளுமை சார் பண்புகளும் பெண்கள் தமது தீர்வினை பெற்றுக் கொள்வதற்கான சவாலாக கருதுகின்றனர் 

அதேவேளை பணி நேரங்களில் அவர்களது வேறு வேலைகளில் ஈடுபடுவது இதனால் சேவை பொருநர் பயப்படுவதை கண்டறிகிறேன்

நீதித்துறையினை பொருத்தவரையில் போலீஸ் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பிரிவு இருந்தாலும் அதில் தமிழ் உத்தியோகத்தர் இல்லாமல் குறிப்பாக பெண் உத்தியோகத்தர் கடமையில் இல்லாமல் வீட்டில் பிரச்சனை என்று கொலை செய்யும் சென்றால் சிலர் மாலை வேலைகளில் தொலைபேசியில் உரையாடி கொள்வதற்கு முயற்சி செய்கின்றன முறைப்பாட்டினை பதிவு செய்யாமல் கணவருக்கு சார்பாக நடத்துதல் தகவல்களை வெளிப்படுத்துதல் பேசுதல் கவுரவ குறைவாக நடத்துதல் வீட்டில் வன்முறை நடந்து கால் பண்ணினால் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்காமல் போன்ற மனவேதனையான சம்பவங்கள் நாளுக்கு நாள் நான் அதிகரித்த வண்ணம் இருப்பதை என்னுடைய ஆய்வின் ஊடாகவும் தனிநபர் சந்திப்புகளின் ஊடாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தமது தீர்வினை பெறுவதற்கான ஆதாரங்களை திரட்டுவதில் சிக்கல்கள் உள்ளது அதேவேளை வீட்டு வன்முறை விளக்கினை தாக்கல் செய்வதற்கு போலீசிற்கு அதிகாரம் இருந்தும் அதில் மந்த நிலை காணப்படுகின்றது போலீசாறினால் வீட்டு வன்முறை வழக்கு தாக்கல் செய்தால் நீதித்துறையிலும் விரைவாக பெண்கள் பாதுகாப்பினை பெறலாம் உணரலாம் ஆனால் போலீசார் அதனை செய்வதில் தாமதமான நிலை அல்லது பக்க சார்பு அல்லது கவனிக்காத தன்மை லஞ்சம் போன்ற இயல்புகள் காணப்படுவதை உணரக்கூடியதாக இருக்கிறது அதே வேலை டநபயட யனை ஏண்டா துறையில் ஆலணி பற்றாக்குறை மிகவும் குறைவு சில நீதிமன்றங்களில் அதற்கான சட்டவாளர் இல்லை அது இன்னமும் வேதனையான விடயம் குறிப்பாக தீவகம் 

பெண்கள் தமக்கான நீதியினை பெறுவதற்கு நீதித்துறையிலும் பல சவால்கள் இருக்கின்றன இலவசமான சேவையை பெற்றுக் கொள்வதற்கு டநபயட யனை மட்டும்தான் இருக்கின்றது அதனால் ஒவ்வொரு பெண்களும் உடனடியாக தீர்வினை பெற முடியாது இருக்கின்றது. தாமதமாகும்போது சமூக தாக்கங்களுக்கும் மீண்டும் மீண்டும் வன்முறைக்கு உள்ளாகும் தன்மை அதிகமாகின்றது பொது அளவு சட்டங்களில் தண்டனை குறைவு அரைவேளை வீட்டு வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் அல்லது சாதாரணமாக பெண்கள் சொத்துக்களை கையாளுவதிலும் பல்வேறான சட்ட சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் அதனால் பொருளாதார ரீதியாக வலுவடைவதற்கு அவர்களால் முடியாத தன்மை உதாரணம் சீதனம் அல்லது சொத்துக்களை கையாளுவதிலும் சிக்கல்கள் இது ஒரு பெரிய சவால் அத்துடன் அயசவயைட எழைடநnஉந, அயசவயைட சயிந இந்த விடயத்திலும் சட்டத்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை இவ்வாறான விடயங்களை குற்றமாகவே கண்டு கொள்வதில்லை பெண்களுக்கு நடக்கும் உணர்ச்சி ரீதியான வன்முறைகளுக்கு ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கட்டாயப்படுத்துதல் சட்டவாளர்கள் உளவியல் ரீதியான மனக்காயங்களை ஆதரிப்பது இல்லை அல்லது கவனிப்பது இல்லை உதாரணம் கவலை மனச்சோர்வு பயம் அதனால் பெண்கள் தேர்வு நோக்கி செய்வதில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர் 

அதேவேளை சுகாதாரத் துறையினரது பங்களிப்பும் இதற்கு மிக முக்கிய பங்களிப்பு செய்கின்றனர் ஆனாலும் அவனது நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன ஒவ்வொரு பிரதேச வைத்தியசாலைகளிலும் நட்பு நிலையங்கள் உருவாக்க வேண்டும் அரசாங்கம் திட்டங்களை உருவாக்கும் ஆனால் அதற்கு பொருத்தமான ஆளணிகளை அல்லது வசதிப்பாடுகளை செய்வதில் மந்தகதி தான் இருக்கின்றது கணவனால் அல்லது நெருங்கிய துணையினால் தாக்கப்பட்டு வந்தால் அவரது மருத்துவ சான்றிதழ் அதனை தெளிவாக உறுதிப்படுத்தினால் அது அவர்களுக்கு மிக முக்கிய சான்றாக இருக்கும் பெண்களும் சமூக காரணங்களுக்காக அதனை இலகுவில் கூறமாட்டினம் இவ்வாறான சந்தர்ப்பங்களும் பெண்கள் தமது தீர்வினை பெறுவதற்கு உதவியாக இருக்கும் கழடடழறரி, கண்காணிப்பு நடவடிக்கைகள் இன்னும் அதிகப்படுத்தலாம் 

மேலும் சமூகத்தில் பல்வேறான நிகழ்ச்சிகளை செய்வதன் மூலம் 

‌ பாடத்திட்டத்தில் பால்நிலை சாறு கல்வியினை அறிமுகப்படுத்த வேண்டும் 

‌ பெண்கள் ஆண்கள் அனைவருக்கும் சம வாய்ப்புகள் சமத்துவத்தினை வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் 

‌ பெண்களுக்கான விழிப்பூட்டல் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் பத்திரிகை டிவி ரேடியோ வீடு நாடகங்கள் 

‌ பழமை சார் கருத்துக்கள் தொடர்பில் விவாத போட்டிகள் கலந்துரையாடல்கள் கருத்துக்களம் போன்றவற்றை ஏற்பாடு செய்வதால் சிந்தனை திறன்களை மாற்றும் போது ஓரளவு முன்னேற்றம் காணலாம் 

‌ ஆண்கள் பெண்கள் திருமணத்திற்கு முன்பு இவ்வாறான உரிமைகள் சட்டங்கள் வாழ்தலின் நோக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் கல்வி வழியாக இதனை செய்ய முடியும் 

‌ பெண்களை குழுவாக உருவாக்கி ஆற்றுப்படுத்தல் நடைமுறைகளை செய்வதன் ஊடாக 

எனவே வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டு தீர்வினை பெறுவதில் உள்ள சவால்கள் தனி ஆளுமையில் தொடங்கி குடும்பம் சமூகம் பொருளாதார அரசியல் என பல்துறைகளிலும் இதனுடைய பங்கு இருக்கின்றது. அந்த வகையில் இது சமூகம் சார்ந்த பிரச்சனையாக இருப்பதால் அனைத்து துறயினரும் இதற்காக உழைக்க வேண்டியுள்ளது எனவே வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டு தீர்வினை பெறுவதில் உள்ள சவால்கள் தனி ஆளுமையில் தொடங்கி குடும்பம் சமூகம் பொருளாதார அரசியல் என பல்துறைகளிலும் இதனுடைய பங்கு இருக்கின்றது. அந்த வகையில் இது சமூகம் சார்ந்த பிரச்சனையாக இருப்பதால் அனைத்து துறையினரும் இதற்காக உழைக்க வேண்டியுள்ளது.

நேர்காணல்  

குடும்ப வன்முறை தொடர்பில் நீங்கள் கருதுவது அல்லது உங்களுடைய மனநிலை என்ன ?

குடும்ப வன்முறை தொடர்பில் நீங்கள் யாரிடமாவது முறையிட்டீர்களா ?

பெண்கள் உரிமைகள் மற்றும் சட்டம் தொடர்பில் என்ன நினைக்கிறீர்கள் ?


பதிலளிப்பவர் 1

வயது 41

வங்கி முகாமையாளர் 

நான் திருமணம் முடித்து 20 வருடம் எனக்கு பிள்ளைகள் இல்லை எனது கணவரும் ஓர் அரச உத்தியோகத்தர். நான் கடந்த 16 வருடங்களாக எனது கணவரால் துன்புறுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றேன் எனது வீட்டிற்கு நான் ஒரே ஒரு பெண் பிள்ளை 2 ஆன் சகோதரர்கள் உண்டு. வீட்டில் செல்லமாக வளர்ந்து இப்ப நாள்தோறும் சரியான கவலையுடனும் வேதனையுடனும் இருக்கின்றேன். சாகலாம் போல இருக்குது சில வேளைகளில் நான் பிரீட்டொன் கூட பாவிக்கின்றேன்.

வீட்டில் பொம்பிளைதான் பொறுத்து போகவேண்டும் நீ கொஞ்சம் பொறுத்து போ எண்டு சொல்லுவினம் வெளியில தெரிஞ்சா மரியாதையில்ல எண்டு சொல்லிச் சொல்லியே வருடங்கள் கடந்திட்டுது இப்ப வரவர மோசமாக இருக்குது அம்மாவும் செத்துப்போனா நான் யாரோடயும் இதுகளை கதைக்கல முறையிடவுமில்லை 

( பொறுத்து போக வேண்டும் என்ற குடும்பத்தின் திணிப்பு சமூகத்திற்கான பயம் வெட்கம் அவமானம் மனச்சோர்வான மனநிலை)

பதிலளிப்பவர் 2

வயது 50 

வீட்டுப்பெண் 

நான் திருமணம் முடித்து 11 வருடங்கள் எனக்கு சீதனம் குடுக்க யாருமில்லை நான் ஒரு சேச்சுக்கு போறனான் அப்பத்தான் நான் இவரை சந்திச்சன் என்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினார். என்னைவிட 10 வயது இவருக்கு குறைவு எனக்கு துணையில்லை அதனால் கடவுளிடம் பாரத்தை கொடுத்திட்டு செய்தனான் இப்ப என்னால முடியுதில்ல எனக்கு கடுமையான பாலியல் தொந்தரவு கொடுக்கின்றார் என்னுடைய சகோதரி சொல்றா கணவனுக்குரிய சந்தோசத்தை நீங்கள் கொடுக்க வேண்டும் அது உன்னுடைய கடமை எனது பாஸ்ட்டரும் அவ்வாறே சொல்கின்றார் ( மத தலைவர்கள் சமூகம் சார்ந்தோர் பெண் என்பவள் ஆணுக்கு சேவை செய்பவளாக இருக்க வேண்டும்

பதிலளிப்பவர் 03

வயது 41

அபிவிருத்தி உத்தியோகத்தர் 

நான் இவரை லவ் பண்ணி 17 வயதில் வீட்டை விட்டு வந்த நான் இப்ப 20 வருடம் திருமணம் முடித்து கட்டின புதுசில நல்லாய் வைத்திருந்தவர் என்னை கேம்பஸ் படிப்பித்தவர் அதுக்குப் பிறகு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்துள்ளார்கள்.

நான் வேலைக்கு அப்ளை பண்ணினான் விடமாட்டேன் என்று விட்டார் நீ வேலைக்கு போக வேண்டாம் எனக்கும் பிள்ளைகளுக்கும் யார் சமைப்பது என்று விடமாட்டார் ஆனால் எனக்கு கணக்கு பார்ப்பார் கையில காசு தர மாட்டார் வீடு கட்டினவர் என்ன சொத்து கொண்டு வந்தனியோ உன்ற உழைப்போ என்ற சொல்லில் சொல்லி மென்டலி கொடுமைப்படுத்துவர் நான் பார்த்துவிட்டு 2019 ஆம் ஆண்டு டியோ வேலைக்கு இவருக்கு தெரியாமல் அப்ளை பண்ணி போட்டேன் பிறகும் ஒரு ஆம்பள பிள்ளை பிறந்தான் 7 வயது இப்ப இன்னும் மோசம் மிஸ் 

எனக்கு ஒரு உதவியும் இல்லை எங்கடா ஆட்கள் சேர்க்கவில்லை சாதி வேறு என்று அவற்ற அம்மா சொல்லுவா ஆம்பளை என்றால் அப்படித்தான் நீங்கள் தான் முதுகல சமாளிக்க வேண்டும் நான் ஆபீஸில் யாரிடமும் கதைப்பது இல்லை அவையால் இதுகளை சிரிப்பாக நினைப்பினம் போலீசுக்கு ரெண்டு ஐந்து தடவை போனான் அவர்கள் உடன வரமாட்டார்கள் பிறகுதான் வருவார்கள் அவர் பிறகு வேலைக்கு போய்விடுவார் அதனால் அயல் ஆட்கள் சொல்லிவிடம் போலீஸ் வராது உங்களுக்கு வெட்கம் நீங்கள் வேறு இடம் பொங்கும் என்று சொல்லுவினம் அதால இப்ப நான் ஒன்றுக்கும் போறதும் இல்லை ஒரு நாளைக்கு இந்த இயலாத பிள்ளைக்கும் நஞ்சை கொடுத்துவிட்டு நானும் செத்துப் போகலாம் என்று நினைக்கிறேன்


பதிலளிப்பவர் 4

வயது 30 

வீட்டுப் பணிப்பெண் 

எனக்கு சின்ன வயதில் அப்பா அம்மா இறந்துட்டினம் ஏழு சகோதரன் எனக்கு நான் அம்மம்மாவுடன் இருந்த நான் புரோக்கர் மூலம் பேசித்தான் கல்யாணம் நடந்தது அப்ப எனக்கு 19 வயது, இவர் துபாயில் இருந்து வந்தவர் என்று சொல்லி செய்தவை அம்மம்மாவுக்கு வயது தானே அதனால் அவா பெருசா விசாரிக்கல அவர்ட சொந்தங்கள் தங்களுக்கு கிட்ட இருக்கலாம் அப்ப ஓகே அவை நல்ல ஆட்கள் என்று எனக்கு சொன்னான் அப்ப நானும் ஓம் என்று விட்டேன். எனக்கு அதுக்கு பிறகு தான் தெரியும் அவர் தடுப்பில தான் கனகாலம் இருந்தவர் என்று இப்ப எனக்கு ஒரே கரைச்சல் தான் என்னை வெளியே விட மாட்டார் வீட்டுக்கு பூட்டி பூட்டி வைப்பார் காசு தர மாட்ட ஒரே சந்தேகப்படுவார் இப்ப வாடகை வீட்டில வேற இருக்கிறம் இதனால அயலும் எனக்கு பழக்கம் இல்லை எனக்கும் அதுகளை யாரிடம் சொல்வது என்று தெரியாது நான் யாரிடம் போவது இனி இரண்டு பிள்ளைகள் சின்ன ஆட்கள் அவைல வளர்க்க வேண்டும் என்று தாங்கிக் கொண்டு இருக்கின்றேன்

மையக்குழு கலந்துரையாடல் 

பால் பால் நிலை என்றால் என்ன 

பெண்கள் தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள் 

உரிமைகள் பற்றி தெரியுமா 

பெண்களுக்கான சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு இருக்கின்ற நடைமுறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது 


பங்குபெற்றியோர் 12 பெண்கள் 

அமர்வின் சுருக்கம் 

ஒருமனத்தியாலம் இக்கலந்துரையாடல் இடம் பெற்றது இதில் ஆண் பெண் பண்புகள் நடத்துகள் இயலுமைகள் பற்றி கூறினார்கள் இதில் ஆண் வீரமானவர் பொருளாதார மீட்டுபவர் குடும்பத் தலைவர் அதிகாரம் அவரிடம் தான் இருக்கிறது இருக்க வேண்டும் இல்லாட்டி அவர் ஆண் என்று சொல்ல முடியாது என்ற பொருள்பட கூறினார்கள் பெண் சமைப்பவர் பிள்ளை வளர்ப்பவர் வீட்டுப் பணிவிடைகளை செய்பவளாகவும் ஆணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் சார்ந்து வாழ வேண்டும் பொறுமை கீழ்ப்படிதல் சமாளிக்க வேண்டும் இல்லாட்டி சமூகத்தில் ஒதுக்கப்படுபவள் குடும்பத்துக்கு மரியாதையினையும் கௌரவத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தங்களைப் பற்றி கூறினார்கள் சேவை வழங்குனர்களில் று.னு  ஐ மட்டும் தெரிந்து வைத்துள்ளார்கள் ஏனைய செயற்பாடுகள் தொடர்பில் போதிய அளவு அறிவு விழிப்புணர்வு இல்லை என்பதை காணக் கூடியதாக இருந்துத



Friday, May 23, 2025

விடய அணுகு முறையியல்

 ஆய்வு ஒன்றினை மேற்கொள்ளுகின்ற விதமும் அதற்காக தரவுகள் பெற்றுக்கொள்ளப்படுகின்ற வழிமுறைகளும் விடய அணுகுமுறையியல் ஆகும். ஆயு;வு என்பது காணப்படுகின்ற விடயங்கள், தோற்றப்பாடுகள், நிகழ்வுகள் தொடர்பானவற்றை விஞ்ஞான ரீதியான துறைகளைப் பயன்படுத்தி அவை தொடர்பான தெளிவுகளைப் பெற்றுக் கொள்ளுவதற்குச் செய்யும் முயற்சியே ஆகும். உளவளத்துணை ஆய்வு என்பது ஒரு தனி மனிதனின் உளத்தை விளங்கிக் கொள்ளுவதற்கான தேடல் ஆகும். உளவியல் பல வகைப்படம். ஆய்வின் விடயம், நோக்கம் என்பவற்றைப் பொறுத்து விடய அணுகு முறையியல்களும் வேறுபடுகின்றன. 

3.1 தகவல் திரட்டல் முறைமை 

தரவு சேகரிப்பு முறைகள், பிரச்சினைகள் பகுப்பாய்வு முறைகள் என்பவற்றை உள்ளடக்கியதாக இந்த அத்தியாயமானது காணப்பபடுகின்றது. ஆய்வினை மேற்கொள்ளுவதற்கான தரவு சேகரிப்பு முறையாக கள ஆயு;வு தெரிவு செய்யப்பட்டுள்ளது. கள ஆய்வு என்பது ஆய்வாளன் ஆய்வு பிரதேசத்திற்கு நேரடியாகச் சென்று அங்குள்ள நிலமைகளை அவதானித்தலும், ஆய்விற்குட்பட்டோருடன் கலந்துரையாடியும் தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் முறையாகும். பிரச்சினையோடு வரும் துணைநாடியை அப்பிரச்சினையிலிருந்து விடுபட உதவுவதற்கு தரவு மூலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தரவு மூலங்கள் இருவகைப்படும். 

1. முதலாம் நிலைத் தரவுகள். 

2. இரண்டாம் நிலைத் தரவுகள் 

முதலாம் நிலைத் தரவுகள். 

முதலாம் நிலைத் தரவுகள் என்பது ஆய்வினை மேற்கொள்ளுபவர் ஆய்வு பிரதேசத்திலிருந்து நேரடியாக திரட்டிக் கொள்ளும் தரவுகள் ஆகும். இத்தரவுகள் நம்பிக்கைத்தன்மை கூடியவையாகும். இக்களப்பணி ஆய்வின் போது முதலாம் நிலைத் தரவுகளை சேவைநாடியிடம் அமர்வுகளின் போது பெறப்பட்டது.

எட்டு அமர்வுகளின் போதும் சேவைநாடியிடமிருந்து பெறப்பட்ட வாய்மொழியற்ற தரவுகளும் கள மேற்பர்வையாளரிடமிருந்தும் பெற்ற தரவுகளும் முதலாம் நிலைத் தரவுகளாக உள்ளன. இங்கு துணைநாடியினுடைய உடல் மொழி ரீதியாக அவர் மிகவும் பீதி நிலையில் இருந்தார். படபடப்பாக அவருடைய உடல் காணப்பட்டது. முகம் வாடிப்போய் இருந்தது. தொனி மிகவும் தாழ்வான சத்தமாக காணப்பட்டது. 


இரண்டாம் நிலைத் தரவுகள் 

சேவைநாடியிடம் வெளிப்பட்ட உள நோய் நிலைமை. அது தொடர்பான விளக்கம். பகுப்பாய்வு செய்தல் மற்றும் சிகிச்சை திட்டமிடல் போன்ற செயற்பாடுகளுக்கான தகவல் திரட்டல் ஆனது இரண்டாம் நிலைத் தரவு திட்டமிடல் மூலம் இடம் பெற்றது. இதற்கு பதிவேடுகள், அறிக்கைகள், நூல்கள், சஞ்சிகைகள், இணையம் போன்றன பயன்பட்டது.


3.2 கணிப்பீட்டு முறைமை 

சேவைநாடியிடம் காணப்பட்ட குணங்குறிகள் மற்றும் அவதானிக்கப்பட்ட விடயங்கள் யாவும் கணிப்பீட்டு முறைக்குள் உள்வாங்கப்பட்டன. நோய் நிர்ணயம் செய்வதற்காக ஐஊனு 10இ னுயளள21இ னுளுஆ ஏ பயன்படுத்தப்பட்டது. சேவைநாடியின் பிரச்சினையை அளவிட்டுக் கொள்ளுவதற்கு ளுறுழுவு இ ளுpனைநச னுயைபசயஅ என்பன பயன்படுத்தப்பட்டது முதலாம் நிலைத் தரவுகள், இரண்டாம் நிலைத் தரவுகளை கொண்டும் கள மேற்பார்வையாளரும் நோய் நிர்ணயப்படுத்தலின் மூலமும் சேவைநாடி பீதி நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார் என்பது கணிப்பிட முடிந்தது. சேவைநாடியிடம் காணப்படும் உளப்பிரச்சினையை அடையாளம் காண்பதற்காக உளவியல் அளவீடுகளான ளுறுழுவு யுயெடலளளை முறைமை ளுpனைநச பசயஅ போன்றன பயன்படுத்தப்பட்டன.


3.3 தகவல் பகுப்பாய்வு முறைமை 

இங்கு சேவைநாடியிடம் இருந்து நேர்காணல் மூலம் பெறப்பட்ட தரவுகள் மற்றும் அவரிடம் அவதானிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் ஏனையோருடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மூலமாக தகவல் பகுப்பாய்வு முறை இடம் பெற்றது. இதற்கான விபரண ஆய்வு பயன்படுத்தப்பட்டது. விபரண ஆய்வு என்பது எடுத்துக் கொள்ளப்பட்ட பிரச்சினை அல்லது விடயம் பற்றிய பூரணமாக தகவல்களைப் பெற்று அதனை விபரிப்பதாகவும் விளக்கமளிப்பதாயும் அமையும். கடினமான மன அழுத்த அறிகுறிகளில் பின்வரும் அறிகுறிகள் சேவைநாடியிடம் அவதானிக்கப்பட்டது. 


உளங்குணங்குறிகள்

தீவிர பதற்றம்

தீவிர பயம்

கவலை

தனிமையாக இருக்க விரும்புதல் 

யாரேனும் அவர்களை தொடுவதைத் தவிர்த்தல்

இறுக்கம்

ஆறுதலின்மை

திடுக்கிடுதல்

கூச்ச உணர்வு

தன்னை விட்டு விலகி இருப்பது

கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் அல்லது "பைத்தியம் பிடித்துவிடும்" என்ற பயம்.

இறக்கும் பயம்.


உடல் சார்ந்த அறிகுறிகள்

வேகமான இதயத்துடிப்பு

நெஞ்சுவலி

சுவாசிப்பதில் சிரமம்

அதிகமாக வியர்த்தல்

தலை சுற்றல்

வயிற்றுவலி

நடுக்கம்

மூச்சுத் திணறல் போன்ற உணர்வுகள்.

மார்பு வலி அல்லது அசௌகரியம்.

குமட்டல் 


பிரச்சினையை விளங்கிக்கொள்ள பயன்படுத்தப்பட்ட கருவிகள் மற்றும் முறைகள்

 கோட்பாட்டுத் தொடர்புகள்

தொழில்வாண்மையான உளவளத்துணைச் செயலமர்வில் சேவைநாடியினுடைய பிரச்சினையை முழுமையாக பகுப்பாய்வு செய்து அறிந்துகொள்வதற்கும் சேவைநாடியை முழுமையாக பிரச்சினையிலிருந்து வெளிகொணர்வதற்கும் கோட்பாடுகள், நுட்பங்கள் மற்றும் திறன்களின் பயன்பாடு மிக முக்கியமானதாகும். அந்தவகையில் ஒவ்வொரு கோட்பாடுகளும் பிரச்சனைகளை அறிந்துகொள்ளத் தேவையான நுட்பங்களைத் தெளிவுபடுத்துகின்றன. 

சேவைநாடியிடமிருந்து பிரச்சனைகளை அடையாளங்காண பயன்படுத்தப்பட்ட கோட்பாடுகளும் நுட்பங்களும்

ஆள்மையக் கோட்பாடு:

சுய அடைவிலும் சுய எண்ணக்கருவிலும் பிரச்சினையை உடைய சேவைநாடிகளுக்கு பயன்படுத்தப்படும் கோட்பாடு ஆள்மையக்கோட்பாடு எனப்படும். 

தொழில்வாண்மையான உளவளத்துணைச் செயலமர்வின் போது சேவைநாடியை மதிப்பளித்து வரவேற்றல் உறவைக்கட்டியெழுப்புவதற்கு முக்கியமாகும். இது இந்தக் கோட்பாட்டில் சுழடிநசவ முயசமரக குறிப்பிட்டதன் படி சுநளிநஉவ எனும் நுட்பம் ஊடாக தெளிவுபடுத்தப்படுகிறது. மேலும், சேவைநாடிக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு சுழடிநசவ முயசமரக கூறிய நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் சுயவெளிப்படுத்தல்  ஆகிய நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. 

மேலும் ஏற்றுக்கொள்ளல், ஒத்துணர்வு ஆகிய நுட்பங்கள் சேவைநாடிக்கும் உளவளத்துணையாளருக்குமிடையில் தொழில்வாண்மையான உறவைக் கட்டியெழுப்ப பயன்படுத்தப்பட்டது. 

உளப்பகுப்பாய்வுக் கோட்பாடு

தொழில்வாண்மையான உளவளத்துணைச் செயலமர்வின் போது சேவைநாடியை சுதந்திர உரையாடலுக்கு அனுமதிப்பதனூடாக அவருடைய பிரச்சனைகளுக்கான காரணங்களை கண்டறியமுடியும். அவர் சுதந்திரமாக உரையாடும் போது வாய்தவறிக்கூறிய விடயங்களை பிரதான தரவுகளாகக் கொண்டு உளவளத்துணைச் செயலமர்வை மேற்கொள்ள முடிந்தது. மேலும், சேவைநாடியினுடைய கடந்தகால பிரச்சனை தொடர்பான வரலாற்றினை அறிந்து கொள்ள டகைந டiநெ எனும் நுட்பம் சாதகமாக அமைந்தது. இதனூடாக குறித்த சேவைநாடி தனது பிரச்சனை தொடர்பான தெளிவினை பெற்றுக்கொள்ளவும் உளவளத்துணையாளர் என்னும் ரீதியில் நாம் கவனிக்கப்படவேண்டிய விடயங்களை அவதானித்து சேவைநாடியை வசதிப்படுத்த முடியும்.

சேவைநாடியின் பிரச்சனைகளிலிருந்து சேவைநாடியை வெளிக்கொண்டுவருவதற்கு  பயன்படுத்தப்பட்ட கோட்பாடுகளும் நுட்பங்களும்:

நடத்தைமாற்றக்கோட்பாடு:

அசாதாரண நடத்தைகளால் பாதிக்கப்பட்ட சேவைநாடிகளுக்கு பயன்படுத்தப்படும்  கோட்பாடு நடத்தை மாற்றக் கோட்பாடு எனப்படும்;.

சுநடயஒயவழைnஇ அழனநடiபெஇ சுழடநிடயலஇ ர்ழஅந றழசமஇ Pழளவைiஎந வாiமெiபெஇ ளுழஉயைட ளமடைட வசயiniபெஇ  நுஒpழளந யனெ சநளிழளெந pசநஎநவெழைn ஆகிய நுட்பங்கள் பயன்படத்தப்பட்டன. 

இருப்பியல்வாத கோட்பாடு:

இருப்பியல்வாதக் கோட்பாடு என்பது தன்னுடைய இருப்பில் பிரச்சனை உள்ளது  என்ற மனநிலையிலுள்ள சேவைநாடிகளுக்கு பயன்படுத்தப்படும் கோட்பாடு இருப்பியல்வாத கோட்பாடு ஆகும். இக்கோட்பாட்டில் டழபழ வாநசயிலஇ னரவல யனெ சநளிழளெiடிடைவைலஇ புழயட ளநவவiபெஇ ளுpசைவைரயட hழடநஇ hநயச யனெ ழெற ஆகிய நுட்பங்கள் குறித்த சேவைநாடி அந்தப்பிரச்சனைகளிலிருந்து வெளிவர பயன்படுத்தப்பட்டன. 

அறிகை மற்றும் நடத்தைமாற்றக் கோட்பாடு:

அறிகைசார் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட சேவைநாடிகளுக்கு பயன்படுத்தப்படும்   கோட்பாடு அறிகைசார் நடத்தைமாற்றக் கோட்பாடு எனப்படும். அந்தவகையில் அறிகைசார் விருத்தியினை சேவைநாடிகளுக்கு ஏற்படுத்தும்போது அவர்கள் அப்பிரச்சனைகளிலிருந்த விடுபட முடிகின்றது. இவற்றில் உளக்கல்வி வழங்கல் எனும் நுட்பம் இன்றியமையாததாகும். 



பிரச்சினையை விளங்கிக்கொள்ள பயன்படுத்தப்பட்ட கருவிகள் மற்றும் முறைகள்

டீயுளுஐஊ ஐனு மதிப்பீட்டுக்கருவி என்பது ஒரு சேவைநாடியை 7 தளங்களில் அவருடைய நிலையை ஆராய்வதற்கு பயன்படுத்தப்படும் மதிப்பீட்டுக் கருவியாகும். யுசயெடன டுயுணுயுசுருளு என்கின்ற உளவியலாளரினால் 1970களில் அறிமுகம் செய்யப்பட்டது.  இது  முழுமையான மதிப்பீட்டு கருவியாகும். நடத்தை, பாதிப்பு, உணர்வு, படங்கள், அறிவாற்றல், தனிநபர்கள் மற்றும் மருந்துகள்ஃஉயிரியல் இந்தக் களங்கள் ஒவ்வொன்றிலும் என்னென்ன சிக்கல்கள் உள்ளன என்பதை உளவளத்துணையாளர் மதிப்பீடு செய்வதுடன் எவ்வாறான இடையீட்டு நடைமுறை நோக்கங்கள் முன்வைக்கப்படவேண்டும் என்பதனை இந்த முழுமையான அணுகுமுறையிலிருந்து மதிப்பீடு செய்வார்.

இந்த மதிப்பீட்டு கருவியானது ஆளுமை மற்றும் சேவைநாடி முன்வைக்கும் சிக்கல்களை அணுகுவதற்கு இந்த பரிமாணங்கள் எவ்வாறு ஒன்றாகச் செயல்படுகின்றன என்பதைப் பார்க்க உளவளத்துணையாளர்க்கு உதவுகிறது. 

இந்த மதிப்பீடானது, பிரச்சனைகளின் காரணிகளை முதன்மையாக பாதிக்கும் பரிமாணங்கள் அல்லது பரிமாணங்கள் பற்றி; கவனம் செலுத்துகிறது.

பதகளிப்பு பிரச்சினையை விளங்கிக் கொள்ள பயன்படுத்தப்பட்ட இலக்கியமீளாய்வு




பதகளிப்பு பெரும்பாலும் நெருக்கீடுகளைத் தொடர்ந்து ஏற்படு கிறது. அதுவும் அனர்த்தகாலங்களைத் தொடர்ந்து பெரும்பாலானவர் களில் காணப்படுகிறது. இவை பெரும்பாலும் உணர்ச்சி வெளிப்பாடாக அல்லது மெய்ப்பாட்டு அறிகுறியாக வெளிப்படுகின்றன. இறுகிய தசைகள், மிகையான களைப்பு, நித்திரையின்மை மற்றும் மூச்சுவிட முடியாமை, அதிக இதயதுடிப்பு, விண்விண் என வலிக்கும் தலையிடி கைகளில் மற்றும் உடலில் ஒருவித குளிர்வியர்வை என்பன இவற்றின் அறிகுறிகளாகக் கொள்ளப்படுகின்றன. இந்த அறிகுறிகள் எமக்கு சாதாரணமாக நெருக்கீடு மிகுந்த வேளைகளில் காணப்படுகின்றன. இவை அதிகமாகவும் தொடர்ந்தும் காணப்பட்டு அவை எம் வாழ்வினைப் பாதிக்கத்தொடங்கும் போது பதகளிப்பு நோயாக எம்மை ஆக்கிரமிக்கின்றன. வாய்வறண்டு உலர்ந்துபோதல், தேவையற்று சினம் கொள்ளுதல் தேவையற்ற அச்சம் பதட்டம் ஏதோ ஒன்று நடக்கப்போவதான பிரமை ஒரு விழிம்பு நிலையில் இருப்பதான உணர்வு என்பனவும் பதகளிப்பு நோயின் அறிகுறிகள். இத்தகைய நோய் எமது சமூகத்தில் அதிகம் காணப்பட்ட போதிலும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்காது விடுவதன் மூலம் பலர் இவற்றைத் தம் வாழ்வின் ஒரு பாகமாக அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். - “நலமுடன்” எஸ். சிவதாஸ்

போர் அனர்த்தம் நிகழ்ந்த பகுதிகளுக்கு சென்றிருந்த போது பல வைத்தியசாலைகள் மீள்புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. பலரும் இடம்பெயர்ந்த முகாம்களில் இருந்து மீண்டு வந்து தமது பணிகளை ஆரம்பிக்கத் தொடங்கி இருந்தனர். அவர்களுக்கு 'மகிழ்வுடன் வாழ்தல்ழூ பயிலரங்குக மேற்கொண்டிருந்தேன். அந்தப் பயிலரங்குகளில் நான் கேட்கும் முக்கியமான கேள்வி உங்கள் பிரதேசங்களில் 'மனநோய்' எவ்வளவு வீதம் காணப்படுகிறது பெரும்பாலானவரின் பதில்கள் 50மூ..70மூ....80மூ....90மூ என அமைந்திருந்தது. சிலர் 100மூ எனக் குறிப்பிட்டிருந்தனர். 50மூ குறைவான மக்கள் என்ற பதிலை அரிதாகவே காணமுடிந்தது. நான் அவர்களிடம் இத்தனை வீதம் மனநோய் இருந்தால் என்பாடு கொண்டாட்டம் தான் எனப் புன்முறுவல் உடன் குறிப்பிட்டேன் பெரும்பாலான பயிலரங்குகளில் இத்தகைய பதில்கள் தெரிவிக்கப்பட்டன. அடுத்ததாக உங்கள் முன்வீடு, அயல்வீடுகள், பின்வீடு என எல்லா வீடுகளிலும் மனநோய் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றனரா என்ற கேள்வி அவர்களைச் சிந்திக்கச் செய்தது. இவர்கள் எல்லோரும் ஏன் இப்படி பதிலளிக்கின்றனர் என்று வினவியபோது பலரும் எல்லோரும் ஏதோ விதத்தில் மனப்பாதிப்புக்களைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள் என்றனர். மனப்பாதிப்புகளுக்கு உட்பட்டிருக்கிற தன்மை மனநோய் ஆகிவிடுமா? பல மனநல மருத்துவர்களின் மனநோய் அதிகரித்திருக்கிறது என்ற கருத்துக்களும் மனநோய் மருத்துவமுகாம் எனச் செய்யப்படுகிற நிகழ்வுகளும் இந்த நிலையில் மக்களைத் தள்ளிவிடுகின்றது. 5-10மூ அதிகமாக மனநோய் இருப்பதற்கான சான்றுகள் சாதாரண சமூகத்தில் இருந்திடமுடியாது. அதிலும் தீவிர மனநோய் என்பது மிகக்குறைவானது. தொடர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இவை 10-15மூ மாக இருப்பதற்கு ஏதுநிலையுண்டு. “மகிழ்வுடன்” எஸ். சிவதாஸ்

பதகளிப்பு என்பது பயம் அல்லது நெருக்கீடு காரணமாக வெளிக்கொணரப்படும் சாதாரண, உணர்வுபூர்வமான உடலியல் இடர்ப்பாடாகும். இது இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள் வதற்கான உடலியல் இசைவாக்கம் ஆகும். இதன் மூலம் உடல், உளரீதியில் அப்பிரச்சினைக்கு முகங்கொடுக்க முடிகின்றது. அதாவது, ஆபத்தானது என்று கணிப்பிடப்படும் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கான அல்லது அதனின்றும் விலகிவிடுவதற்கான உடல், உள உசார்ப்படுத்தலாகும்  (கiபாவ ழச கடiபாவ). இவ்வாறான இயற்கையான பயப்பாடு அல்லது கவலை அளவுமீறி அல்லது தொடர்ந்து காரணமின்றித் தோன்றும்போது அது (நோயியல் தன்மை பெறுகிறது). அதனைப் பதகளிப்புக் கோளாறு என்று அழைக்கலாம். கவலை, பயம் போன்றவற்றினால் ஏற்படுத்தப்படும் பதகளிப்பு நோயுடன் மிதமான மனச் சோர்வும் சேர்ந்து அமையலாம். - தமிழர் சமுதாயத்தில் உளநலம் தயா சோமசுந்தரம் , சா சிவயோகன்

இலங்கை உளவளத்துணை வரலாறு

இலங்கையின் வரலாற்றில் அசாதாரண நடத்தைகளை குணப்படுத்துவதற்காக ஆரம்ப காலங்களில் இரண்டு வகையான சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று ஆயுர்வேத வைத்திய முறை மற்றது சாந்தி செய்தல் முறை இவை பரம்பரையோடும் சமயத் தோடும் தொடர்புடையதாக அமைந்தது. இலங்கையின் வரலாற்றில் அசாதாரண நடத்தைகளை குணப்படுத்துவதற்காக ஆரம்ப காலங்களில் இரண்டு வகையான சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

1. ஆயுர்வேத வைத்திய முறை 

2. சாந்தி செய்தல் முறை 

இவை பரம்பரையோடும் சமயத் தோடும் தொடர்புடையதாக அமைந்தது. 



மேலும் 1846 இல் பொரல்லையிலுள்ள கெம்பல் பூங்காவிற்கு அருகில் உளரீதியாகப் பாதிக்கப்பட்டோருக்கான வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டது. 1845இல் ஆளுநராக சேர் கொலின் கெம்பல் என்பரே இதற்கான ஆலோசனையை முன்வைத்தார். 1851இல் பொரல்லை மருத்துவமனையின் தலைவராக வைத்தியர் பெம்பீக் தெரிவு செய்யப்பட்டார். அவர் பரீட்சார்த்தமாக தொழில் பயிற்சி சிகிச்சை முறையை ஆரம்பித்து வைத்ததோடு பயன்மிக்க ஆலோசனைகளையும் முன்வைத்தார். பொரல்ல மருத்துவமனையில் ஏற்பட்ட இடநெருக்கடியினால் 1876-1885 இடைப்பட்ட காலத்தில் கொழும்பு குறுந்துவத்தையில் இன்னுமொரு மனநோய் மருத்துவமனை கட்டப்பட்டது. பின்னர் உருவாக்கப்பட்டது. 1964 1971 இல் இல் அங்கொடையில் கொழும்பு பிரதான மற்றுமொரு மருத்துவமனை வைத்திசாலையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உளமருத்துவப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டது. (அஸ்கர்:2010:12) 1960 காலப்பகுதியில் ஜோன் மேயர் என்னும் ஆசிரியரினால் கல்வி அமைச்சினூடாக உளவியல் கற்பிக்கப்பட்டது. ஆனால் இதில் ஆசிரியர்கள் கவனிக்கப்படவில்லை. பின்னர் பல்கலைக்கழகங்களில் மாணவர், ஆசிரியர்களின் தேவை கருதி 1981 காலப்பகுதியில் உளவளத்துணைப் பாடப் போதனை ஆரம்பிக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு உளவளத்துணை சேவைக்காக பல நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. இந்நிறுவனங்களினூடாக உளவளத்துணை இலங்கையில் பல பாகங்களுக்கும் பரவலாகச் சென்றடைந்தது. 1986ஆம் ஆண்டு அப்போதிருந்த அரசாங்கம் இத்துறையின் பக்கம் விசேட கவனம் செலுத்தியமை வரலாற்றில் முக்கியமானதாகும். 1988 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இத்துறை ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. பேராசிரியர் ரணவக்க உளவியல் நிறுவனம்  ஒன்றை ஆரம்பித்தமை முக்கிய அம்சமாகும். மேலும் 2008 ஜனவரி மாதத்திலிருந்து தொலைபேசியூடாக உளவளத்துணை சேவையை வழங்கும் ஒரு நிகழ்ச்சித்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.


உளவளத்துணைக்கான நிர்வாக கட்டமைப்பு

உளவளத்துணை கிளையானது மேலதிக அரசாங்க அதிபரின் நேரடிக் கட்டுப்பாடில் அரசாங்க அதிபரின் தலைமையின் கீழ் மாவட்டத்திற்கான பல்வேறுபட்ட உளவளத்துணை சேவைகளை வழங்கிவருகின்றது.

உளவியல் முறைகளின் ஊடாக நபர்களின் விருத்தி சமநிலையற்ற உளநிலைகளைத் தவிர்த்தல், நிறுவன ஒருங்கிணைப்பு தலைமைத்துவம் வழங்குதல் அறிவூட்டல் மற்றும் உளவளத்துணை தேவைகளை நிறைவுசெய்தல் மூலம் சுகாதாரத்தை மேம்படுத்தி சகல பிரஜைகளையும் இலங்கையின் தேசிய அபிவிருத்தியில் பங்குபெறவைத்தல். 

உளவளத்துணைக்கான நிர்வாக கட்டமைப்பு மாவட்ட செயலாளர் மேலதிக மாவட்ட செயலாளர் உதவி மாவட்ட செயலாளர் மாவட்ட உளவளத்துணை அலுவலர் 

 மாவட்ட செயலகத்தின் உளவளத்துணை அமர்வுகளுக்காக உளவளத்துணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உளவளத்துணை செயலமர்வுடன் தொடர்புபட்ட உத்தியோகத்தர்களான கிராமசேவகர்கள் பெண்கள் மற்றும் சிறுவர் உளவளத்துணை உத்தியோகஸ்த்தர்கள் , பிரதேச செயலக உளவளத்துணை ஆலோசகர்கள் , சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் , சமூகசேவை உத்தியோகஸ்த்தர்கள் பலரும் சேவைநாடிகளை அனுப்பிவைக்கும் தன்மை காணப்படுகின்றது.

உளவளத்துணை - அறிமுகம்

 ஒருவருக்கு ஏற்படுகின்ற உளவியல் சார்ந்த பிரச்சினை, சிக்கல் களுக்கு உதவுகின்ற செயற்பாட்டிற்கு ஆங்கிலத்தில் உழரளெநடடiபெ எனக் கூறப்படுகின்றது. இதனைத் தமிழ் மொழியில் கூறும்போது தென்னிந்தியாவில் இருந்து தமிழில் வெளிவருகின்ற உளவியல் சார் புத்தகங்களில் "ஆற்றுப்படுத்தல்' என்ற சொல் பயன்படுத்தப்படு கின்றது. அதேபோன்று இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் வெளியீடுகளில் "வழிகாட்டலும் ஆலோசனையும்" என்ற சொற்பிர யோகம் பயன்படுத்தப்படுகின்றது. அவ்வாறே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வி சார் வெளியீடுகளில் "சீர்மியம்" என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் இந்தியாவிலும் இலங்கை யிலும் ''உளவளத்துணை" என்ற சொற்பிரயோகமும் பயன் படுத்தப்பட்டு வருவதை அவதானிக்க முடியும். மேற்குறிப்பிடப்பட்ட சொற்பிரயோகங்களில் "உளவளத் துணை" என்ற பதமே மிகப் பொருத்தமாகும்.



மனிதன் தனது நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியவனாக இருக்கின்றான். இவ்வாறு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவனை அனுபவத்தைக் கற்றுக்கொள்ளவும், அதிலிருந்து சில பாடங்களைக் கற்றுக்கொள்ளவும் உதவி செய்கின்றது. ஆதலால் பலர் தனக்கு வாழ்க்கையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தானே தீர்த்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்கின்றனர். அதே வேளை சிலர் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் உளவியல் தாக்கத்திற்கும் உள நெருக்கீடுகளுக்கும் உட்பட்டு தனது நாளாந்த வாழ்க்கையினை இயல்பாக கொண்டு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றான். இதனால் தனது நாளாந்த வாழ்க்கையில் தானும் பல்வேறு துன்பத்திற்கு உள்ளாகி ஏனையவர்களையும் அப்பிரச்சினைகளுக்கு உட்படுவதையும் வாழ்க்கையில் நாளாந்தம் அவதானிக்க கூடியதாக உள்ளது. 

அவ்வாறு பிரச்சினைகளுக்கு உட்படும் போது அவனது உணர்வுகள் மேலோங்குகின்றது. அதே வேளை அவனது சிந்தனையில், பார்வையில் (நோக்குகின்றவிதம்), நடத்தையில் பிறழ்வு ஏற்படுகின்றது. இவ்வாறான நிலையிலுள்ளவர்களுக்கு உளவளத்துணை செயற்பாட்டின் மூலம் அவரது சிந்தனையில், பார்வை, உணர்வு, நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தி அவருக்குள் இருக்கின்ற சக்தி, ஆற்றல், திறமைகள் என்பனவற்றைப் பயன்படுத்தி அவரை தன்னுடைய பிரச்சினைகளை தானே தீர்த்துக் கொள்ள உதவி செய்யும் ஒரு செயன்முறையை நாம் உளவளத்துணை செயற்பாட்டில் பயன்படுத்துகின்றோம்.

உளவளத்துணை பற்றி பலர் பல கருத்துக்களையும், வரைவிலக்கணங்களையும் முன்வைத்துள்ளனர். அமெரிக்க உளவியல் சங்கம் இத்துறையை பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தியுள்ளது. ஒருவர் தனது உளவளங்களின் முழுமையான விருத்தியை நோக்கி செல்கின்ற பயணத்தில் தான் எதிர்கொள்ளும் தடைகளை வெற்றி கொள்ள அவருக்கு அளிக்கும் தொடர் செயற்பாட்டு உதவியே உளவளத்துணையாகும். வரைவிலக்கணமானது உள ஆற்றுபடுத்துதலை வளர்ச்சி அனுபவமாக நோக்குகின்றமை நல்ல அம்சமாகக் காணப்படுகின்றது. அதாவது சேவைநாடியின் வளர்ச்சிக்கு, விருத்திக்குத் துணை புரிதலே உள ஆற்றுப்படுத்தலாகும் என்பது இதன் கருத்தாகும்.

குரோ என்ற உளவியலாளரின் கருத்துப்படி வாழ்க்கையை சீரமைத்துக்கொள்வதற்கு உதவி தேவைப்படும்போது அதற்கு தகுதியுள்ள ஒருவரினால் அளிக்கப்படும் உதவி வழிகாட்டல் நடவடிக்கையே உளவளத்துணை என்கின்றார்.

பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த “எனி ஜோன்ஸ்” என்பவர் உளவளத்துணை என்பது “சக்தியை பெற்றுக்கொடுக்கும் செயல் நடவடிக்கை ஒன்றாகும்” என சுருக்கமான அடிப்படையில் வரைவிலக்கணப்படுத்தியுள்ளார்.

கார்ல்ஸ்ரோஜர் தனது வரைவிலக்கணத்தில் “உளவளத்துணை என்பது ஒருவருக்கு அவரைப்பற்றிய தெளிவை ஏற்படுத்தி அதற்கமைய அவர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவரே தீர்த்துக்கொளவதற்கு வழங்கப்படும் உதவியாகும்”என்கின்றார். இவ்வாறு வேறுபட்ட உளவியளாளர்கள் பல்வேறு பட்ட கருத்துக்களை வழங்கியிருந்த போதிலும் பொதுவாகப் பார்க்கும் போது உளவளத்துணை என்பது பிரச்சினைக்கு உட்பட்ட ஒரு நபருக்கு அவரிடமே மறைந்திருக்கும் வளமான திறன்கள், பலம் ஆகியவற்றை வெளிக்கொணர்வதன் மூலம் அவருக்கு அந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்கும் ஒரு பொறிமுறையை உளவளத்துணை எனலாம்.

உளவளத்துணை என்பது வாழ்க்கையை சீரமைத்துக்கொள்வ தற்கு ஒருவருக்கு உதவி தேவைப்படும்போது அதற்குத் தகுதி யுள்ள ஒருவரினால் அளிக்கப்படும் உதவி, வழிகாட்டல்.   -குரோவும்-

உளவளத்துணை என்பது சக்தியைப் பெற்றுக்கொடுக்கும். நடவடிக்கை ஒன்றாகும்.   -எனிஜோன்ஸ் -

உளவளத்துணை என்பது உளவளத்துணையாளர் ஒருவருடன் கலந்துரையாடுவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப் பயன்படுத்தப்படும் நுட்பமாகும்.  -போர்டின்-

உளவளத்துணை என்பது ஒருவருக்கு அவரைப் பற்றிய தெளிவை ஏற்படுத்தி அதற்கமைய அவர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவரே தீர்த்துக்கொள்வதற்கு வழங்கப்படும் உதவியாகும்.  -கார்ல் ரோஜர்ஸ்-

உளவளத்துணை என்பது வாழ்க்கையில் எதிர்நோக்கும் ஒவ்வொரு அனுபவங்களையும் வெற்றிகரமாக எதிர் கொள்ளக் கூடிய ஆற்றலை ஒருவரிடத்தில் விருத்தி செய்ய உதவி வழங்கும் செயன்முறையாகும். -ஆன் ஜோன்ஸ்-

உளவளத்துணை என்பது எல்லா சந்தர்ப்பங்களிலும் உறுதி யான முடிவுகளை எடுப்பதற்கு வழங்கப்படும் உதவியாகும்.  -எஸ் மொரிசன்-